திடீரென சென்னை திரும்பினார் ஜெயலலிதா
சென்னை:
ஹைதராபாத்தில் இரு வார கால ஓய்வுக்காக சென்ற முதல்வர் ஜெயலலிதா திடீரென அதை பாதியில் முடித்துக்கொண்டு நேற்றிரவு சென்னை திரும்பினார்.
சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்தவுடன் கடந்த 14ம் தேதி ஜெயலலிதா ஹைதராபாத் புறப்பட்டுச்சென்றார்.
அங்கு தனது திராட்சைத் தோட்டத்தில் சசிகலாவுடன் ஓய்வெடுத்து வந்தார். இந் நிலையில் அவரது பயணம்பாதியில் முடிந்துள்ளது.
உலக வங்கிக் குழு இன்னும் சில நாட்களில் சென்னை வரலாம் என்று கூறப்படுகிறது. இதற்காக வந்துள்ளஜெயலலிதா அந்தக் குழு ஊர் திரும்பியவுடன் மீண்டும் ஹைதராபாத் செல்வார் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் சனிப் பெயர்ச்சியையொட்டி வீட்டில் விஷேச பூஜை நடத்துவதற்காக அவர் வந்ததாகவும்தெரிகிறது. இன்று சென்னையிலேயே இருந்தாலும் அவர் தலைமைச் செயலகத்துக்கு வரவில்லை. இதனால் சனிப்பெயர்ச்சி தொடர்பான பூஜை போயஸ் தோட்டத்தில் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications