கிணற்றில் விழுந்து பெயின்டர் பரிதாப சாவு: 5 மணி நேர மீட்பு முயற்சி தோல்வி

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் 130 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெயின்ட் அடிக்கும் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

அருளானந்தம் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேல் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்கு வர்ணம் பூசும் பணியில்சந்தான கிருஷ்ணன் என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று கூரை உடைந்தது.

இதில் நிலை தவறி, அருகில் இருந்த கிணற்றில் விழுந்தார் சந்தான கிருஷ்ணன்.

உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்துசந்தான கிருஷ்ணனை மீட்க முயன்றனர். ஆனால் கிணற்றில் விஷ வாயு இருந்ததால், சந்தான கிருஷ்ணனைமீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து முதலில் விஷ வாயு அகற்றப்பட்டது. பின்னர் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. அதன் பிறகு சந்தானகிருஷ்ணன் வெளியே கொண்டு வரப்பட்டார். ஆனால் நீண்ட நேரமாக கிணற்றில் இருந்ததாலும், விஷ வாயுவைசுவாசித்ததாலும் அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

சுமார் 5 மணி நேரமாகப் போராடியும் சந்தான கிருஷ்ணனை உயிருடன் மீட்க முடியாமல் போய்விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+