For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அல்ஜீரியாவில் நிலநடுக்கம்: 550 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

அல்ஜியர்ஸ்:

அல்ஜீரியா நாட்டில் ஏற்பட்ட மிக பயங்கரமான பூகம்பத்தில் 550 பேர் பலியாகியுள்ளனர். மேலும்ஆயிரக்கணக்கனோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். சுமார் 4,368 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1 மணியளவில் மூன்று முறை இங்கு பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர்அளவுகோளில் 6.7 அளவுக்கு இந்த நிலநடுக்கம் பதிவானது. சில இடங்களில் 5 நிமிடங்கள் வரை நிலநடுக்கம்நீடித்தது.

தலைநகர் அல்ஜியர்வை ஒட்டியுள்ள மாவட்டங்கள் தான் இதில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டாக அந் நாட்டுஅதிபர் அப்தல்அஜீஸ் பவுதபில்கா கூறியுள்ளார். அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பீதியடைந்த மக்கள்லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் உறங்கினர்.

அல்ஜீரியா முழுவதும் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சரிந்து கிடக்கின்றன. மீட்புப் பணிகளில் அந் நாட்டுராணுவத்தினரும் பொது மக்களும் ஈடுபட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X