சேலம் சிறையில் மாஜி திமுக எம்.எல்.ஏ. சிவராமன்
திருப்பத்தூர்:
தா.கிருட்டிணன் படுகொலை தொடர்பாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியின்முன்னாள் திமுக எம்.எல்.ஏவான ராம.சிவராமன் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.
மதுரையில் தா.கிருட்டிணன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, மு.க.அழகிரியைததொடர்ந்து சிவராமனும் கைது செய்யப்பட்டார்.
அவரை திருப்பத்தூர் குற்றவியல் நீதிபதி மணிமொழியரசுவின் வீட்டில் ஆஜர்படுத்தினர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவராமனை கைது செய்துள்ளதாக நீதிபதியிடம் போலீஸார்தெரிவித்தனர்.
இதையடுத்து சிவராமனை 15 நாள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
அதன் பின்னர் உடனடியாக சேலம் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிவராமன் அங்குஅடைக்கப்பட்டார். சிவராமனைக் கைது செய்தபோது, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுரகளை செய்த அவரது ஆதரவாளர்கள் 10 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications