பேச்சுவார்த்தை முழு வேஸ்ட்: விடுதலை புலிகள் கருத்து
கொழும்பு:
இலங்கை அரசுடன் நடத்தப்பட்ட 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் வெட்டி வேலையாகப் போய்விட்டதாகவிடுதலைப் புலிகள் இயக்கம் கூறியுள்ளது.
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தாய்லாந்திலும் நார்வேயிலும் 6 சுற்றுப் பேச்சு நடந்தது.ஆனால், இதில் ஒப்புக் கொள்ளப்பட்ட பல விஷயங்களை அமலாக்க அரசு மறுத்ததால் பேச்சுவார்த்தைகளில்இருந்து விலகுவதாக புலிகள் அறிவித்தனர்.
அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளோடு, ஜப்பானில் நடக்கவுள்ள நிதியுதவி மாநாட்டையும் புறக்கணிப்பதாகபுலிகள் அறிவித்தனர்.
இந் நிலையில் அவர்களை மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடச் செய்ய நார்வே துணை அமைச்சர் விடார்ஹெல்கெசன் கொழும்பு வந்து அரசுடனும் தமிழர் பகுதிக்குச் சென்று புலிகளின் அரசியல் பிரிவினரையும்சந்தித்துப் பேசினார்.
பேச்சுவார்த்தைகளில் புலிகளைப் பங்கேற்கச் செய்ய புதிய சமரசத் திட்டத்தையும் அவர் உருவாக்கியுள்ளதாகத்தெரிகிறது. இந்த சமரசத் திட்டம் புலிகளால் ஏற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து ஜப்பான் நிதியுதவி மாநாட்டில் புலிகள் பங்கேற்பர் என்று தெரிகிறது.
இது தொடர்பாக தங்களது நிலையை புலிகள் நாளை அறிவிக்க உள்ளனர்.