வைகோவின் ஊரைச் சேர்ந்தவர் பெருமாள் சாமி

Subscribe to Oneindia Tamil

சிவாகாசி:

Perumal Samiநிதித்துறை இணையமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனிடம் தனி உதவியாளராக இருந்து கொண்டுலட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி வந்த பெருமாள் சாமி என்ற பாபு மதிமுக தலைவர் வைகோவின்சொந்த ஊரான கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர்.

இவர் மீது ஏற்கனவே பல புகார்களும் உள்ளன. இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர். பல காலமாகவேடெல்லியில் வசித்து வரும் இவருக்கு மதிமுக தவிர அனைத்து எம்.பிக்களிடமும் நல்ல பழக்கம்உண்டு.

அவர்களது கேஸ், டெலிபோன் கோட்டக்களை விற்று பணமாக்கித் தருவது, எம்.பி. வளர்ச்சி நிதியைசெலவழித்ததாகக் காட்ட போலி ஆவணங்கள் தயாரித்துத் தருவதில் இவர் எக்ஸ்பர்ட்.

அதிமுக ராஜ்யசபா எம்.பியாக இருந்த ஆஸ்டினின் பெயரில் ஒருவருக்கு அமெரிக்கா செல்ல விசாவாங்க முயன்றபோது இவர் சிக்கினார். ஆனால், அரசியல் செல்வாக்கால் தப்பித்துக் கொண்டார்.

இந்த முறை சி.பி.ஐயிடம் மாட்டிக் கொண்டுள்ள இவரை 10 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கநீதிமன்றம் அனுமதி தந்துள்ளது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில்வைத்து அவரை சிபிஐ விசாரிக்கும்.

அதே போல இவரிடம் லஞ்சம் தந்த வருமான வரித்துறை அதிகாரி அனுராக் வர்தனையும், டெல்லிஐ.ஐ.டியைச் சேர்ந்த பத்மநாபன் என்பவரையும் ஜூன் 2ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கவும்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த லஞ்சப் பணம் கைமாறியதில் பத்மநாபனுக்கும் தொடர்பிருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+