ஜீ.வி தற்கொலை: 30 பேரிடம் தீவிர விசாரணை
சென்னை:
சினிமா தயாரிப்பாளர் ஜீ.வி தற்கொலை தொடர்பாக அவருக்கு பணம் கொடுத்த பைனான்சியர்கள்உள்ளிட்ட 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை மாநகர காவல்துறைஆணையர் விஜயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் விஜயக்குமார் பேசுகையில்,
தயாரிப்பாளர் ஜீவி தற்கொலை குறித்து தீவிர விசாரணைநநிடந்து வருகிறது. அவருக்குப் பணம்கொடுத்த பைனான்சியர்கள் உள்பட 30 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. விரைவில் துப்புதுலங்கும்.
சென்னை நகரில் வாகனத் திருட்டு அதிகரித்துள்ளது. அதைத் தடுக்க காவல்துறை பல்வேறுநடவடிக்கைளை எடுதது வருகிறது. வாகனத் திருட்டில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்யவும் தயங்க மாட்டோம் என்றார்.
பைனான்சியர்களிடம் விசாரணை நடப்பதாகத் தெரிவித்த விஜய்குமார் பெயர்களைக்குறிப்பிடவில்லை. ஆனால், சசிகலாவின் பினாமியாகக் கருதப்படும் அன்புச்செழியனிடமும் விசாரணைநடத்தப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications