கூவத்தில் நீந்தியவர் மனநல மருத்துவமனையில் அட்மிட்!
சென்னை:
சாக்கடையும் கழிவும் ஓடும் ஆறான கூவத்தில் நீந்திய, மன நிலை பாதிக்கப்பட்ட வாலிபர்மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னையின் புரதான சின்னங்களில் ஒன்று கூவம். ஒரு காலத்தில் ஆறாக ஓடிய கூவத்தில்இப்போது வெறும் சாக்கடைதான் ஓடுகிறது. இந் நிலையில், அண்ணாசாலை, பெரியார் பாலம்அருகே இந்தக் கழிவு நீரில் இறங்கிய ஒரு வாலிபர் அதில் நீந்த ஆரம்பித்தார்.
தெர்மகூல் அட்டையை படகு போல பயன்படுத்தி அந்த நபர் ஹாயாக சென்று கொண்டிருந்தார்.இதைப் பார்த்து அதிர்ந்து போன பொதுமக்கள் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த அண்ணா சதுக்கம் போலீஸார், அந்த நபரை கரைக்குக் கொண்டு வந்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது தனது பெயர் டேவிட் என்றும் திருநிெல்வேலியைச்சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார். வேறு எதுவும் அவருக்கு சொல்லத் தெரியவில்லை.
மன நிலை பாதிக்கப்பட்டவர் போல அவர் தெரிந்தார். இதையடுத்து அவரை கீழ்ப்பாக்கம் மன நலமருத்துவமனையில் போலீசார் சேர்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications