புலிகள் கோரிக்கை: ரணிலுக்கு சந்திரிகா எச்சரிக்கை
கொழும்பு:
வட-கிழக்கு மாகாணத்தில் தங்கள் தலைமையில் உடனே இடைக்கால அரசை அமைக்க வேண்டும் என்ற புலிகளின்கோரிக்கையை ஏற்கக் கூடாது என இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளில் மீண்டும் பங்கேற்க வேண்டுமானால் தங்களது இந்தக் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்என புலிகள் நிபந்தனை விதித்துள்ளனர். இதை ஏற்க ரணில் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந் நிலையில் சந்திரிகாவின் மக்கள் கூட்டணி செய்தித் தொடர்பாளர் சரத் அமுனுகமா நிருபர்களிடம் பேசுகையில்,
வட-கிழக்கு மாகாணத்தில் புலிகள் தலைமையில் இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படுவதை அதிபர் சந்திரிகாவின்மக்கள் கூட்டணி கடுமையாக எதிர்க்கிறது. புலிகளின் இந்தக் கோரிக்கையை பிரதமர் ரணில் ஏற்கக் கூடாது.
அதிபரின் அனுமதி இல்லாமல் இந்த விஷயத்தில் புலிகளுக்கு ரணில் எந்த வாக்குறுதியும் தர முடியாது.
அதையும் மீறி புலிகளுக்கு ரணில் பணிந்தால் அவரது ஆட்சிக்கு பெரும் பிரச்சனை ஏற்படும். இடைக்காலநிர்வாகத்தை அமைக்க அரசியல் சட்டத்தை ரணில் திருத்தியாக வேண்டும். ஆனால், அதிபரின் மக்கள் கூட்டணிஆதரவு இல்லாமல் நாடாளுமன்றத்தில் சட்டம் திருத்தத்தை ரணிலால் நிறைவேற்ற முடியாது.
இதை ரணில் மீறினால் அவரது ஆட்சியையும் நீக்க அதிபருக்கு அதிகாரம் உண்டு என்றார்.