ராஜினாமா செய்ய செஞ்சி ராமச்சந்திரனுக்கு வாஜ்பாய் உத்தரவு?
டெல்லி:
நாளை மாற்றி அமைக்கப்படவுள்ள மத்திய அமைச்சரவையில் இருந்து மதிமுகவைச் சேர்ந்த மத்திய நிதித்துறைஇணையமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் கழற்றி விடப்படுவார் என்று தெரிகிறது.
லஞ்சம் வாங்கியதையடுத்து இவரது உதவியாளர் பெருமாள்சாமி சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.உதவியாளர் பெருமாள்சாமி தவிர சென்னையைச் சேர்ந்த சார்ட்டர்ட் அக்கெண்டன்ட் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி- சென்னையில் பெரிய நெட்வொர்கே வைத்து பல வகைகளிலும் செஞ்சி ராமச்சந்திரன் ஊழல் செய்துவந்துள்ளதாக பிரதமர் வாஜ்பாயிடம் சி.பி.ஐ. ரிப்போர்ட் தந்துள்ளது. மிக சென்சிட்டிவான நிதித்துறையில் இருந்துகொண்டு இவ்வாறு ஊழல் செய்தது குறித்து வாஜ்பாயே அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து அவரை ராஜினாமா செய்யுமாறு பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.ஆனால், இப்போது சென்னையில் உள்ள செஞ்சி ராமச்சந்திரன் இந்த விவகாரத்தில் இருந்து தப்பும் முயற்சிகளில்ஈடுபட்டுள்ளார். இருப்பினும் அவரைக் கழட்டி விட பிரதமர் முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. இன்று அவர்தனது ராஜினாமா கடித்தைத் தராவிட்டால் நாளை மாற்றி அமைக்கப்படும் அமைச்சரவையில் இருந்துராமச்சந்திரன் நீக்கப்படலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications