For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பதவி விலக செஞ்சி ராமச்சந்திரனுக்கு கடும் நெருக்கடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஊழல் புகாரில் சிக்கினாலும் பதவி விலக மறுத்துவிட்ட நிதித்துறை இணையமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் இன்றுடெல்லி நார்த் பிளாக்கில் தனது அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றி வருகிறார்.

தனது கேபினட் அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கையும் அவர் இன்று சந்தித்துப் பேசினார். ஆனாலும் அவரை உடனேபதவி விலகுமாறு ஜஸ்வந்த் சிங்கும் கூறிவிட்டதாகத் தெரிகிறது.

மேலும் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், அவராகவேபதவி விலக வேண்டும் என பா.ஜ.கவும் கோரிக்கை விடுத்துள்ளன.

வைகோ கோபம்:

செஞ்சி ராமச்சந்திரன் மீது கடும் கோபத்தில் வைகோ இருப்பதாகத் தெரிகிறது. இன்று தனது கட்சியின் சில மாவட்டத்தலைவர்களை சிறைக்கு வரவழைத்த வைகோ தீவிர ஆலோசனை நடத்தினார். பதவி விலகி விடுமாறு அவர்கள் மூலமாகவேசெஞ்சி ராமச்சந்திரனுக்கு வைகோ தகவல் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்னொரு மதிமுக அமைச்சரான கண்ணப்பன் இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். இதனால் டெல்லி வட்டாரத்தில் நடப்பதைதனது எம்.பியான சி. கிருஷ்ணன் மூலமாகத் தான் வைகோ அறிந்து வருகிறார். (மதிமுகவுக்கு மொத்தம் வைகோவையும் சேர்த்துமொத்தம் 4 எம்.பிக்கள் உள்ளனர்). அமைச்சரவையில் இருந்து ராமசந்திரன் நீக்கப்பட்டால் அந்த இடம் சி.கிருஷ்ணனுக்குக்கிடைக்க நிறையவே வாய்ப்புள்ளது.

பிரதமரும் கோபம்:

சிபிஐ விசாரணையை ஆரம்பித்துவிட்டதால் செஞ்சி ராமச்சந்திரனை பதவியில் வைத்திருக்கமுடியாது என வாஜ்பாய் கூறிவிட்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றுஅவர் விலகாவிட்டால் நாளை அமைச்சரவை மாற்றத்தின்போது தூக்கிவிட வாஜ்பாய் முடிவுசெய்துள்ளார்.

இதற்கிடையே செஞ்சி ராமச்சந்திரனை பதவியில் இருந்து நீக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகோரிக்கை விடுத்துள்ளது. பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறுகையில், ஊழல் புகாரில்சிக்கிவிட்டவர் அமைச்சரவையில் தொடர்வது சாத்தியமில்லை. பதவி விலகுவது குறித்து செஞ்சிராமச்சந்திரன் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X