செஞ்சி ராமச்சந்திரன் ராஜினாமா: கருணாநிதி வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனது உதவியாளர் செய்த தவறுக்கு தார்மீகப் பொறுப்பேற்று செஞ்சி ராமச்சந்திரன் மத்திய அமைச்சர் பதவியில்இருந்து விலகியிருப்பதை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார்.
இந்த ராஜினாமாவால் மதிமுக தனிமைப்படுத்தப்படாது. யாரும் யாரையும் தனிமைப்படுத்த முடியாது.
இந்த ஊழல் புகார் காரணமாக மதிமுகவின் எதிர்காலமும் பாதிக்கப்படாது. இதை அவ்வளவு பெரிய விஷயமாகநான் பார்க்கவில்லை.
தமிழகத்தில் அதிமுக செய்து வரும் ஊழல்களுக்கு கணக்கு வழக்கே கிடையாது. அதற்கு அதிமுகவில் யாரும்தார்மீக பொறுப்பேற்தும் கிடையாது. இதை பத்திரிக்கைகளும் கண்டு கொள்வது கிடையாது.
தா.கிருட்டிணன் கொலை வழக்குதொடர்பாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ள கருத்துக்கள் குறித்துநான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இந்த பிரச்சினை நீதிமன்றத்தில் உள்ளதால், கருத்து கூறவிரும்பவில்லை என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications