அழகிரி கைதை வைத்து இளங்கோவன்- சோ.பா. மோதல்
ராமநாதபுரம்:
மு.க.அழகிரி கைது குறித்து காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள கருத்துக்கள்அவரது சொந்தக் கருத்து. அது காங்கிரஸ் கட்சியின் கருத்தல்ல என்று காங்கிரஸ் தலைவர்சோ.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க.அழகிரி கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும்நடவடிக்கை, இது தொடர்பாக தமிழக போலீசார் நியாயமாக விசாரணை நடத்த மாட்டார்கள்.இதனால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று இளங்கோவன் கூறியிருந்தார்.
இளங்கோவனின் இந்தக் கருத்தை ஏற்க முடியாது என சோ.பா. கூறியுள்ளார். இளங்கோவன்கூறியது அவரது சொந்தக் கருத்து தான் என்றும் அவர் கூறுகிறார்.
இதன் மூலம் இருவருக்கும் இடையே நிலவும் பூசல் இன்னும் வலுவுடன்தான் இருக்கிறது என்பதுஉறுதியாகியுள்ளது. இளங்கோவன் பேட்டி குறித்து ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் சோ.பா.கூறியதாவது:
தா.கிருட்டிணன் கொலை தொடர்பாக உண்மையான குற்றவாளிகளை தப்ப விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது காவல்துறையின் கடமை.
தா.கிருட்டிணன் கொலை தொடர்பாகவும், அதன் பிறகு எழுந்த சூழ்நிலைகள் (அழகிரி கைது)குறித்தும் இளங்கோவன் கூறியுள்ளது அவரது சொந்தக் கருத்துக்கள். அது காங்கிரஸ் கட்சியின்கருத்தல்ல.
தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை கவனிக்க10 பேர் கொண்ட நிர்வாகக் குழுஅமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் பணிகள் குறித்து டெல்லியில் வருகிற27ம் தேதிநடைபெறவுள்ள கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications