பெண்களிடம் நிர்வாண பூஜை: கேரள சாமியார் கைது

Subscribe to Oneindia Tamil

கரூர்:

கரூர் அருகே பெண்களிடம் நிவாண பூஜை நடத்த வேண்டும் என்று கூறிய கேரள சாமியாரைபோலீஸார் கைது செய்தனர்.

கரூர் தான்தோன்றிமலைப் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜ். இவர் வீடு கட்டி வருகிறார்.கட்டுமானப் பணி தள்ளிக்கொண்டே போனதால், சுரேஷ் என்ற சாமியாரை அணுகி ஆலோசனைகேட்டுள்ளார்.

இந்த சாமியார் கேரளாவின் மிகப் பிரபலமான சோட்டாணிக்கரை பகவதியம்மன் கோவிலைச்சேர்ந்தவர்.

இதையடுத்து அந்த சாமியார் கிட்டத்தட்ட 20 நாட்களாக விஜயராஜின் வீட்டில் தங்கியிருந்து பூஜைகள்செய்து வந்தார். அப்போதே அவரது மகள்கள் மீது இவரது கண் பட்டதாகத் தெரிகிறது.

இந் நிலையில் திடீரென வீட்டில் இருந்த பெண்களை நிர்வாணமாக வரச் சொன்னார். விஜயராஜின்மனைவி மற்றும் 4 மகள்களை நிர்வாணமாக வரச் சொல்லி வற்புறுத்தினார்.

இதற்கு விஜய்ராஜ் மறுப்பு தெரிவித்தார். ஆனால், தொடர்ந்து சாமியார் வற்புறுத்தவே அதிர்ந்துபோன விஜயராஜ், தான்தோன்றி மலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார்,சாமியாரைக் கைது செய்துள்ளனர்.

இவர் மீது சோட்டாணிக்கரை பகவதியம்மன் கோவில் நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கும் என்றுதெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+