மதிமுகவில் இன்னொருவருக்கு பதவி: வாஜ்பாய் தயார்- வைகோ ஏற்க மறுப்பு
டெல்லி &சென்னை:
செஞ்சி ராமச்சந்திரன் ராஜினாமவைத் தொடர்ந்து மதிமுகவைச் சேர்ந்த இன்னொருவருக்கு அமைச்சர் பதவித் தரத்தயார் என பிரதமர் வாஜ்பாய் அறிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவையில் நேற்றிரவு மாற்றம் செய்யப்பட்டது. சில அமைச்சர்களின் இலாகாக்கள்மாற்றப்பட்டுள்ளன. சில ஆர்.எஸ்.எஸ்காரர்கள் துணை அமைச்சர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மத்திய அரசுடன்ஏற்பட்ட மோதலால் கடைசி நேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அமைச்சர் பதவியைநிராகரித்துவிட்டார்.
ஆனால், அவருடன் பேச்சு நடத்தி விரைவில் அவரை மத்திய அமைச்சராக்குவோம் என வாஜ்பாய்அறிவித்துள்ளார். மேலும் மதிமுகவைச் சேர்ந்த செஞ்சி ராமச்சந்திரன் ஊழல் குற்றச்சாட்டால் பதவி விலகியதால்அக் கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவருக்குப் பதவி தரவும் தயார் என்று வாஜ்பாய் அறிவித்துள்ளார்.
ஆனால், ராமச்சந்திரன் தவிர இப்போது வைகோவும், பழனி எம்.பியான கிருஷ்ணனும் மட்டுமே மதிமுகஎம்.பிக்களாக உள்ளனர். இன்னொரு எம்.பியான கண்ணப்பன் அமைச்சராக உள்ளார்.
இதனால் கிருஷ்ணனுக்குத் தான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இதில் அவசரம் காட்டவேண்டாம் என வைகோ கூறிவிட்டதாகத் தெரிகிறது.
ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து செஞ்சி ராமச்சந்திரனை வெளியே கொண்டு வருவது தான் கட்சியின் முதல்கடமையாக இருக்க வேண்டும் என தன்னைச் சந்தித்த மதிமுகவினரிடம் வைகோ கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து ராமச்சந்திரன் வெளியே வந்தால் தான் மதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள கெட்டபெயரைத் துடைக்க முடியும். இல்லாவிட்டால் பொது வாழ்வில் தூய்மை என்பதை கொள்கையாகக் கொண்டகட்சியின் எதிர்காலமே கடுமையாக பாதிக்கப்படும் என வைகோ நினைக்கிறார்.
இதனால் இப்போதைக்கு வேறு யாரையும் மத்தியில் அமைச்சராக்க வைகோ தயாராக இல்லை என்றுகூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications