For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் தென் சென்னை அதிமுக செயலாளரானார் ஆதி ராஜாராம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அடாவடிக்குப் பெயர் போன ஆதி ராஜாராமை மீண்டும் தென் சென்னை மாவட்டச் செயலாளராக முதல்வர்ஜெயலலிதா நியமித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வட சென்னை மாவட்டத்தில் ரவுடித்தனக்குக்குப் பெயர் போனவராக விளங்கியமதுசூதனனை அமைச்சராக்கினார் ஜெயலலிதா. அப்போது மதுசூதனனின் வலது கரமாக இருந்தவர் ஆதிராஜாராம். திமுக ஆட்சியில் ஜெயலலிதா செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்குப் பாதுகாப்பு தருவதுமதுசூதனன்- ஆதி ராஜாராமின் வேலையாக இருந்தது.

பின்னர் ஆட்சிக்கு வந்தவுடன் மதுசூதனனை அமைச்சராக்கினார் ஜெயலலிதா. கட்சியில் ஆதி ராஜாராமும் வெகுவேகமாக வளர்ந்தார். தென் சென்னை மாவட்ட அதிமுக செயலாளரானார்.

அந்த நிலையில் தான் முதல்வர் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு உள்ளிட்ட சில விஷயங்களில் வழக்குகளைப்போட்டார் வக்கீல் விஜயன். இதையடுத்து வக்கீல் விஜயன் மீதான கொலை வெறித் தாக்குதல் நடந்தது. அவரதுவீடு சூறையாடப்பட்டது. இதில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார் ஆதி ராஜாராம்.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த ஆதி ராஜாராம், பின்னர் ராஜ்யசபா தேர்தலுக்கும்நிறுத்தப்பட்டு, கடைசி நேரத்தில் வாபஸ் பெறப்பட்டார். சமீப காலமாக போயஸ் தோட்டம் இவரைகண்டுகொள்ளவில்லை.

ஆனாலும் இவரது சம்பாத்தியத்தையும் தடுக்கவில்லை. இதனால் தொடர்ந்து தீவிர ஜெயலலிதா விசுவாசியாகவேசெயல்பட்டு வருகிறார்.

சமீப காலமாக பெரிய அளவில் கட்சிப் பதவி எதுவும் கொடுக்கப்படாமல் இருந்த ஆதி ராஜாராம் தற்போதுமீண்டும் தென் சென்னை மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை ஜெயலலிதா பிறப்பித்துள்ளார். இதுவரை இப்பொறுப்பில் இருந்த ராஜேந்திர பாபுநீக்கப்பட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X