போலீஸ் பாதுகாப்பு கோருகிறது அழகிரியின் குடும்பம்
மதுரை:
எங்களுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வருவதால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே வீட்டுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று மு.க.அழகிரியின் மனைவி காந்திமதுரை போலீசாரிடம் மனு கொடுத்துளளார்.
ஏற்கனவே கொலை மிரட்டல் காரணமாக அழகிரியின் குடும்பத்தினர் சென்னை வந்துவிட்டனர். முதலில் அவர்கள்எங்கு தங்கியுள்ளார்கள் என்பதே தெரியாமல் இருந்தது. ஆனால், இப்போது அவர்கள் திமுக தலைவர்கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இந் நிலையில் தான் மதுரை உதவி போலீஸ் கமிஷனர் ஹேமா பிரமிளாவிடம் அழகிரியின் மனைவி காந்தி சார்பில்ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அதில், அரசியல் பழிவாங்கல் காரணமாக எனது கணவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொய்வழக்குப் போட்டு அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
இந் நிலையில் எங்களைக் கொலை செய்யவும், வீட்டை சூறையாடவும் ஒரு கும்பல் முயற்சிப்பதாக தகவல்கிடைத்துள்ளது. வீட்டுக்கும் அடிக்கடி கொலை மிரட்டல் வந்தவண்ணம் உள்ளது.
எங்களது குடும்பத்தினரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார் காந்தி.
தாங்கள் சென்னையில் இருந்தாலும் கூட மதுரை வீடு சூறையாடப்படும் என அழகிரி குடும்பத்தினர் அஞ்சுவதாகத்தெரிகிறது.












Click it and Unblock the Notifications