கோவையில் 20 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை நகரில் ஹோட்டல்கள், விடுதிகளில் வேலையில் அமர்த்தப்பட்டிருந்த 20 சிறார் தொழிலாளர்கள்மீட்கப்பட்டனர்.
தொழிலாளர் துறை ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுக்கள் இதற்கானசோதனையில் இறங்கின.
கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, வால்பாறை ஆகிய பகுதிகளில் உள்ள 150க்கும் மேற்பட்ட கடைகள்,ஹோட்டல்கள், விடுதிகள், தொழில் நிறுவனங்களில் இக்குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் 11 கடைகள் மற்றும் 9 ஹோட்டல்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த 20 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.இவர்களை வேலைக்கு அமர்த்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications