ஈராக்குக்கு இந்திய அமைதி படை: அமெரிக்கா நெருக்கடி
டெல்லி:
ஈராக்கில் அமைதி காப்புப் படைக்கு இந்திய ராணுவத்தையும் அனுப்புமாறு அமெரிக்கா நெருக்கடி தந்துவருகிறது. இது தொடர்பாக இன்று பிரதமர் வாஜ்பாய் ராணுவ அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
ஆனால், இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பிரதமர் அலுவலகம் எதுவும் சொல்ல மறுத்துவிட்டது. இதனால்அமெரிக்க நெருக்குதலுக்குப் பணிந்து இந்தியப் படைகள் அனுப்பப்படலாம் என்று தெரிகிறது.
உலகின் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் மீறி ஈராக்கை அமெரிக்கா-பிரிட்டிஷ் படைகள் தாக்கி அந் நாட்டைகைப்பற்றியுள்ளன. இப்போது அங்கு அமைதியை நிலை நாட்ட கூடுதல் படைகள் தேவைப்படுகின்றன.
இதில் பிற நாட்டுப் படைகளையும் ஈடுபடுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக படைகளை அனுப்புமாறுஜோர்டன், பாகிஸ்தான், இந்தியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளை நெருக்கி வருகிறது.
இதையடுத்து ராணுவத் தளபதி, வெளியுறவுத்துறைச் செயலாளர், பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பிரதமர்வாஜ்பாய் இன்று நெடுநேரம் ஆலோசனை நடத்தினார்.
இதில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், இப்போது ஜோர்டானில் இருந்து செயல்பட்டுவரும் ஈராக்குக்கான இந்தியத் தூதர் தியாகியை மீண்டும் பாக்தாதுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகமட்டும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
படைகளை அனுப்புவது குறித்து எந்தக் தகவலும் வெளியிடவில்லை. இது தொடர்பாக மேலும் ஆலோசனைநடத்த வாஜ்பாய் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications