பெற்ற மகளுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட தாய்!!
சென்னை:
விபச்சாரத்தில் ஈடுபட்ட தாயும், மகளும் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் உள்ள ரெட்டியார் தெருவில் வசித்து வருபவர் சாந்தி என்ற செல்வி. இவர்தனது கணவரைப் பிரிந்து பாண்டியன் என்பவருடன் சேர்ந்து வசித்து வந்தார்.
செல்வியின் மகள் கயல்விழி. இவருக்குக் கல்யாணமாகி விட்டது. குறுகிய காலத்தில் பணக்காரராக வேண்டும்என்று விரும்பிய செல்வி விபச்சாரத்தில் ஈடுபட்டார். அத்தோடு தனது மகளையும் மூளைச் சலவை செய்துவிபச்சாரத்தில் ஈடுபடுத்தினார்.
பகல் நேரத்தில் தனது கணவர் வேலைக்குச் சென்றவுடன் தாய் வீட்டு வந்துவிடுவார் கயல்விழி. பின்னர் வீட்டுக்குவரும் கஸ்டமர்களோடு தாயும், மகளும் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் போனது. இதையடுத்து மாறு வேடத்தில் போலீஸார் அங்கு சென்றனர்.வாடிக்கையாளர் போல நடித்து வீட்டுக்குள் புகுந்த போலீஸார், அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கயல்விழியை"கையும் களவுமாக" பிடித்தனர்.
அவரது தாய் செல்வியையும் போலீஸார் கைது செய்தனர்.