குற்றாலத்தில் குளு குளு சீசன் தொடங்கியது
நிெல்லை:
குற்றாலத்தில் குளு குளு சீசன் முன் கூட்டியே தொடங்கி விட்டது. இதனால் அருவிகளில் மக்கள் கூட்டம் களைகட்டத் தொடங்கியுள்ளது.
குறைந்த செலவில் குளுகுளு சீசனை அனுபவிக்க சிறந்த இடமாக குற்றாலம் திகழ்கிறது. இதனால் ஒவ்வொருஆண்டும் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
வழக்கமாக ஜூன் 1ம் தேதி குற்றால சீசன் தொடங்கும். தென் மேற்கு பருவ மழையின் தொடக்கமே,குற்றாலத்திலும் சீசன் தொடக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு திடீர் திடீர் என தென் மாவட்டங்களில் மழைபெய்ததால் அருவிகளில் கோடை காலத்தில் கூட தண்ணீர் இருந்தது.
இந் நிலையில் குற்றாலத்தில் சாரல் மழை ஆரம்பித்துவிட்டது. இதனால் அருவிகளில் தொடர்ந்து நீர் கொட்டத்தொடங்கியுள்ளது. குளு குளு காற்றும் வீசுவதால் மிக ரம்மியமான சூழல் நிலவுகிறது. ஐந்தருவி, மெயின் அருவி,புலியருவி, பழத்தோட்ட அருவி, தேனருவி, சிற்றருவி, செண்பகா தேவி அருவி, பழைய குற்றால அருவி எனஅத்தனை அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருகிறது.
இதனால் அனைத்து அருவிகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வெயில் கொடுமையில்இருந்து தப்ப தென் மாவட்ட மக்கள் குற்றாலத்துக்ப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications