வீரபாண்டி ஆறுமுகம் மருமகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் சோதனை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மருமகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் திடீர் சோதனைநடத்தி வீட்டின் மதிப்பு, சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் செழியன். இவர் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவிபிருந்தா தனது 2 குழந்தைகளுடன், சீரங்கபாளையத்தில் வசித்து வருகிறார்.
இந்த வீட்டுக்கு லஞ்ச ஒழிப்புப் போலீஸார் திடீரென வந்தனர். வீட்டின் மதிப்பை ஆராய்ந்தனர். பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உதவியுடன் இந்த சோதனை நடந்தது. பிருந்தாவின் பேரில் உள்ள சொத்துவிவரங்களையும் சேகரித்துவிட்டுச் சென்றனர்.
கடந்த வாரம் முழுவதும் முன்னாள் திமுக அமைச்சர்களான கோ.சி. மணி மற்றும் துரைமுருகனின் வீடுகளிலும்உறவினர்கள் வீடுகள், தொழிற்சாலைகளில் சோதனைகள் நடந்தன.












Click it and Unblock the Notifications