For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜூன் 5ம் தேதி சென்னையில் பொடா எதிர்ப்பு மாநாடு
சென்னை:
சென்னையில் ஜூன் 5ம் தேதி பொடா எதிர்ப்பு மாநாடு நடக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இக் கட்சியின் தமிழ்மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு மாநில செயலாளர்வரதராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வறட்சியை சமாளிக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின்நிதியுதவியைப் பெற முயற்சிக்க வேண்டும்.
பொடா சட்டம் தமிழகத்தில் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் தவறாகப்பயன்படுத்தப்படுகிறது. எனவே அதை எதிர்த்து இயக்கமே நடத்த நாங்கள முடிவு செய்துள்ளோம்.
முதல் கட்டமாக சென்னையில் வரும் 5ம் தேதி பொடா எதிர்ப்பு மாநாடு நடத்தப்படும் என்றார்.
Comments
Story first published: Tuesday, May 27, 2003, 5:30 [IST]