அக்னி நட்சத்திரம் முடிந்தது: ஆனாலும் வெயில் தொடருமாம்!
சென்னை:
கத்திரி வெயில் என செல்லமாக அழைக்கப்படும் அக்னி நட்சத்திர காலகட்டம் இன்று மாலையுடன்முடிவுக்கு வந்தது. இருப்பினும் இன்னும் சில நாட்களுக்கு கடும் வெயில் நிலவும் என்று வானிலைஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு வெயில் கடுமையாக இருக்கிறது. குறிப்பாக அக்னி நட்சத்திர நாட்களில்வெயில் உச்சத்தை எட்டியது. கடந்த 21ம் தேதி தான் தமிழகத்திலேயே அதிக அளவாகஅரக்கோணத்தில் 116 டிகிரி வெயில் பதிவானது. அதற்கு அடுத்த நாள் சென்னை நகரில் 113டிகிரி வெயில் கொளுத்தியது.
கத்திரி நாட்களின்போது கடும் அனல் காற்று நிலவியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகபாதிக்கப்பட்டது. வெளியே தலை காட்ட முடியாமல் மக்கள் திணறினர்.
இருப்பினும் தென் தமிழகத்தில் சில பகுதிகளில் திடீர் திடீரென நல்ல மழையும் சூறாவளி காற்றும்வீசியது. இது கத்திரி வெயிலின் கொடுமையை ஓரளவுக்குக் குறைத்தது.
இந் நிலையில் இன்று மாலை 5 மணியுடன் கத்திரி வெயில் காலம் முடிந்தது. இருப்பினும் இன்னும்ஒரு சில நாட்களுக்கு அனல் காற்றும், கடும் வெப்பமும் குறையாது என்று வானிலை ஆராய்ச்சிநிலையம் கூறியுள்ளது.
படிப்படியாகத்தான் வெப்பம் குறையு என்றும் ஜூன் முதல் வாரத்திற்குள் வெப்ப நிலை சராசரிஅளவுக்குத் திரும்பி விடும் என்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்றைய வெப்பம்: 107 டிகிரி.
ஆந்திராவில் வெப்பத்தின் கொடுமை தமிழகத்தை விட அதிகமாக உள்ளது. அங்கு இந்த ஆண்டில்வெயிலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 494 ஆக உயர்ந்துள்ளது.
மதுரையில் கன மழை: இளைஞர் பலி
இந் நிலையில் மதுரையில் திடீரென கன மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் இளைஞர்பலியானார்.
சென்னை தவிர தமிழகத்தின் தென் மற்றும் மத்தியப் பகுதிகளில் அவ்வப்போது நல்ல மழை பெய்துவருகிறது.
மதுரையில் நேற்றிரவு கன மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் மட்டுமே பெய்த இந்தமழையினால் மதுரை நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியது.
பெரியார் பஸ் நிலையத்தில் தண்ணீர் நிறைந்தது. அந்த அளவுக்கு மழை கடுமையாக இருந்தது.
பலத்த இடி- மின்னலும் இந்த மழை பெய்தது. அப்போது கோரிப்பாளையம் பகுதியில் நடந்துசென்ற செந்தில் என்ற வாலிபர் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் உடல் கருகி பரிதாபமாகஉயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications