இப்ராகிம்: வெடிகுண்டு வீசுவதிலும் கில்லாடி!
மதுரை:
தா.கி. கொலை வழக்கில் சென்னை நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்த இப்ராகிம் சுலைமான்சேட்டின் கூட்டாளியான சுருளி என்பவரும் கொடைக்கானல் மலைப் பகுதியில்பதுங்கியிருந்தபோது பிடிபட்டார். இவரும் தா.கியைக் கொன்ற கும்பலில் இடம்பெற்றிருந்தார்என்று கூறப்படுகிறது.
இப்ராகிம் சுலைமான் சேட் ஏற்கனவே பல வழக்குகளில் பல முறை கைதானவர் என்று தெரியவருகிறது. அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்கப்பட்டதன் நினைவு நாளையொட்டி 2ஆண்டுகளுக்கு முன் இவரை முன்னெச்சரிக்கையாக மதுரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது இவரது வீட்டில் சோதனை நடத்தியபோது ஏராளமான வெடிகுண்டுகளும்கைப்பற்றப்பட்டன.
வெடிகுண்டுகள் தயாரிப்பதிலும் அவற்றை இயக்குவதிலும் இவர் கை தேர்ந்தவர் என்றுகூறப்படுகிறது. தொழில் முறையில் குற்றங்கள் செய்வது இவர் வழக்கமாம்.
கொடைக்கானில் சிக்கிய சுருளி:
சுலைமான் சேட்டின் கூட்டாளியான சுருளி என்பவரும் தா.கியைக் கொன்ற கும்பலில் இடம்பெற்றிருந்ததாகத் தெரிகிறது.
சுருளியும் பிரபலமான குற்றவாளிதான். பலமுறை போலீஸாரின் பிடியிலிருந்து தப்பியவர்.இதுவரை தா.கியையும் சேர்த்து இவர் 9 கொலைகளை மதுரையில் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மதுரை அருகே உள்ள ஒத்தகடை பகுதியைச் சேர்ந்தவர் சுருளி. 2 ஆண்டுகளுக்கு முன் மதுரைமேலமாசி வீதியில் புஷ்பராஜ் என்பவரை பட்டப்பகலில் பொதுமக்கள் மத்தியில் வெட்டிக்கொன்றார் இவர்.
தா.கி. படுகொலைக்குப் பின் சுருளி, கொடைக்கானல் தப்பி விட்டார். அவரைப் பிடிக்க போலீஸ்படை விரைந்தது. அவர்களிடமிருந்து சுருளி தப்பிக்க முயன்று தோல்வியுற்றார்.
அவரை கோழி அமுக்குவது போல பிடித்து வந்துவிட்டனர் மதுரை போலீசார். இன்னும் இவர் மீதுகுற்றம் பதிவு செய்யப்படவில்லை. தல்லாகுளம் காவல் நிலையத்தில் வைத்து இவரை கவனிக்கும்விதத்தில் கவனித்து விவரங்களைக் கறந்து வருகின்றனர் போஸ் தலைமையிலான போலீஸ்அதிகாரிகள் குழு.
இதன் பின்னர் இவர் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டு மற்ற நால்வருடன் சேர்த்து உள்ளேதள்ளப்படுவார் என்கிறது மதுரை போலீஸ் வட்டாரம்.