சோதனைக்காக சென்ற புதிய ரயில் பெட்டிகள் தடம்புரண்டன
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) இருந்து சோதனை ஓட்டத்திற்காகச் சென்றரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் அப்பகுதியில் மின்சார ரயில் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் பெரம்பூர் முதல்அரக்கோணம் வரை சோதனையிடப்படுவது வழக்கம்.
வழக்கம்போல நேற்றிரவும் இந்தப் பெட்டிகள் என்ஜினுடன் பொறுத்தப்பட்டுசோதனையிடப்பட்டன. அப்போது அப்போது வில்லிவாக்கம் ரயில் நிலையம் வந்தபோது, 2பெட்டிகள் தடம்புரண்டன.
இதனால் அப்பகுதியில் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக ரயில்பெட்டிகளை அகற்றும் பணியும் தண்டவாளங்களை சரி செய்யும் பணியும் தொடங்கின.
சுமார் 4 மணி நேரத்திற்குப் பிறகு தான் ரயில் பாதை சரி செய்யப்பட்டது. அதன் பிறகே மின்சாரரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.












Click it and Unblock the Notifications