கொடைக்கானலில் கொளுத்திய வெயில்!
கொடைக்கானல்:
கோடை கொடுமையிலிருந்து தப்புவதற்காக கொடைக்கானல் சென்ற சுற்றுலாப் பயணிகளுக்குஅதிர்ச்சி அளிக்கும் விதமாக, நேற்று கொடைக்கானலில் கடும் வெயில் வாட்டி எடுத்தது.
இதனால் சுற்றுலா சென்றவர்கள் லாட்ஜ்களிலேயே அடைபட்டுக் கிடக்கும் சூழல் உருவானது.
தமிழகம் முழுவதிலும் கடந்த 20 நாட்களாக வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இதனால் வெயிலில்இருந்து தப்ப குளு குளு பகுதிகளான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, முதுமலை, குற்றாலம்போன்ற சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
ஆனால், நேற்று கொடைக்கானல் சென்றவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. குளுகுளுவுக்குப் பதில் கடு கடு வெயில் வறுத்தெடுத்தது.
கடும் வெயிலால் ஊரைச் சுற்றிப் பார்க்கச் சென்றவர்கள் அதைத் தவிர்த்துவிட்டு லாட்ஜ்களுக்கேதிரும்பி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. மாலையில் தான் அவர்கள் மீண்டும் வெளியே வந்தனர்.
ஒரு நாள் பயணமாக கார்கள், வேன்களில் சென்றவர்கள் மர நிழல்களிலேயே பெரும்பாலானநேரத்தைக் கடத்த வேண்டிய நிலை உருவானது. இதனால் மரத்தடிகளில் தான் கூட்டம்அலைமோதியது.
கொடைக்கானலுக்கு வந்து இப்படி வியர்வையில் நனைய நேரிட்டதை நினைத்து சுற்றுலாப்பயணிகள் நொந்து போயினர்.
வழக்கமாக வெள்ளி நீர் வீழ்ச்சியை பார்ர்பதோடு நின்று விடும் சுற்றுலா பயணிகள், நேற்று அடித்தவெயில் காரணமாக, உயிரைப் பணயம் வைத்து நீர் வீழ்ச்சியில் நின்று தங்களை அசுவாசப்படுத்திக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications