For Quick Alerts
For Daily Alerts
Just In
மண்ணில் புதைந்து இரட்டை சகோகதரிகள் சாவு
கிருஷ்ணகிரி:
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி அருகே மண் சரிந்து இரட்டை சகோதரிகள் மண்ணில் புதைந்துஇறந்தனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ளது வேடியம்பட்டி. இங்கு ஏரி தூர் வாறப்பட்டு வருகிறது. இந்தப்பணியில் ராமசாமி என்பவரின் இரட்டைக் குழந்தைதகளான ராமக்காள் மற்றும் லட்சுமி(இருவருக்கும் வயது 16) ஆகியோரும் மண்ணெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மண்ணை அவர்கள் ஏரிக் கரையில் குவித்து வந்தனர். மிக உயரமாக அந்த மண் குவிந்திருந்தது.
அப்போது திடீரென மண் சரிந்தது. இதில் சகோதரிகள் இருவரும் மண்ணில் புதைந்தனர்.
பொது மக்களும் தீயணைப்புப் படையினரும் சேர்ந்து மண்ணை வேகமாக அகற்றினர். ஆனால்,அதற்குள் அந்த இரு சகோதரிகளும் மூச்சு முட்டி இறந்துவிட்டனர். அவர்களது பிணங்கள் தான்மீட்கப்பட்டன.
Comments
Story first published: Thursday, May 29, 2003, 5:30 [IST]