தமிழ்நாட்டில் வாக்கிங் கூட போக முடியவில்லை: திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் காலையில் வாக்கிங் கூட போக முடியாத அளவுக்கு சட்டம், ஒழுங்கு கெட்டு குட்டிச்சுவராகிவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன்கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துகிடக்கிறது.
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் படுகொலை செய்யப்பட்டுள்ளது தொடர்பாகஉண்மையான குற்றவாளிகளை கைது செய்ய போலீஸார் முயற்சிக்க வேண்டும்.
காலையில் வாக்கிங் போகக் கூட முடியாத அளவுக்கு தமிழகம் மாறிவிட்டது. அந்த அளவுக்குஇந்த அரசு சட்டம் ஒழுங்கை பராமறிக்கிறது.
தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் பொடா சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.எனவே இந்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திகிறேன்என்றார்.












Click it and Unblock the Notifications