For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீஸ் கஸ்டடிக்கு போவாரா அழகிரி: ஜூன் 2ல் தெரியும்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மு.க.அழகிரியை தங்களது கஸ்டடிக்குக் கொண்டு செல்ல அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்தமனு மீது ஜூன் 2ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.

தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றக் காவலில் அவர் இருப்பதால் அவரிடம் போலீசார்விசாரணை நடத்த முடியவில்லை.

இதையடுத்து அவரை போலீஸ் காவலுக்கு மாற்றி தங்களிடம் 5 நாட்கள் ஒப்படைக்கும்படி மதுரை6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு செய்துள்ளனர்.

இதை எதிர்த்து அழகிரியின் வக்கீல்கள் மோகன்குமார், பழனிச்சாமி ஆகியோர் தாக்கல் செய்தமனுவில், அழகிரியை போலீஸ் காவலில் விடக் கூடாது. அவ்வாறு போலீஸ் காவலில்அனுப்பினால் அவர் துன்புறுத்தப்படலாம் என்று கூறியுள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணை ஜூன் 2ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி வனிதா அறிவித்துள்ளள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X