காவிரி: பெங்களூரில் தமிழக- கர்நாடக விவசாயிகள் பேச்சு
திருச்சி::
தமிழகத்துக்கு நீர் விடக் கோரும் காவிரி நதி நீர் ஆணையத்தின் இடைக்கால உத்தரவை முறையாகஅமலாக்குமாறு கர்நாடக அரசை வலுயுறுத்துமாறு அம் மாநில விவசாயிகளுக்கு தமிழக விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தமிழக காவேரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பின் அவசரக் கூட்டம் இன்று திருச்சியில்நடந்தது. அதில் காவிரி நீரைப் பெற கர்நாடக விவசாயிகளின் உதவியை நாடுவது எனமுடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடக விவசாயிகள் சங்கத்தினருடன் வரும் ஜூன் 4 மற்றும் 5ம் தேதிகளில்பேச்சு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு கர்நாடக விவசாயிகளும்முன் வந்திருப்பதாகத் தெரிகிறது. இந்தப் பேச்சுக்கள் பெங்களூரில் நடக்கவுள்ளன.
இதற்காக தமிழக விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பெங்களூர் செல்கின்றனர். கடந்த ஏப்ரல் 4,5ம்தேதிகளில் சென்னையில் நடந்த கூட்டத்தில் கர்நாடக விவசாயிகள் சங்கத்தினரும் வந்துபங்கேற்றனர். அந்தப் பேச்சுவார்த்தைகள் மிகச் சுமூகமாக நடந்தன.
காவிரி விவகாரத்தில் அரசியல்வாதிகளின் தலையீட்டைத் தவிர்த்துவிட்டு இரு மாநிலவிவசாயிகளும் பேச்சு நடத்தினால் தான் பிரச்சனையைத் தீர்க்க முடியும் எனவும் தமிழகவிவசாயிகளின் இன்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெங்களூரில் நடக்கும் கூட்டத்தில் தமிழ்நாட்டில் நிலவி வரும் குடி நீர் தட்டுபாடு குறித்தும் கர்நாடகவிவசாயிகளுடன் பேச முடிவு செய்யப்பட்டுள்ளது.