ராமர் கோவிலை கட்டியே தீருவோம்: சங்கராச்சாரியார்
சென்னை:
அயோத்தியில் ராமர் கோவிலை கண்டிப்பாக கட்டியே தீருவோம் என காஞ்சி சங்கராச்சாரியார்ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார்.
வட இந்திய சுற்றுப்பயணம் செல்லும் அவர் சென்னை விமான நிலையத்தில் செதியாளர்களிடம்பேசுகையில்,
அயோத்தியில் ராமர் கோவில் கண்டிப்பாக கட்டப்படும். இதில் உறுதியாக இருக்கிறோம். அதில்சந்தேகமே வேண்டாம்.
ஆனால், இந்தப் பிரச்சினையில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அதுவெற்றி பெறாது. அரசியல்வாதிகள் ஒதுங்கிக் கொண்டால் பிரச்சனையை பேசித் தீர்க்க முடியும்.
ராமர் கோவில் அருகிலேயே மசூதியையும் கட்டலாம் என்று கூறிய பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யாநாயுடு பின்னர் நான் அப்படிப் பேசவே இல்லை என்று கூறியிருக்கிறார். விரைவில் சிலமாநிலங்களில் தேர்தல்கள் வருவதையொட்டி அவர் இவ்வாறு பேசியிருக்கலாம்.
பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண அரசியல்வாதிகள் ஒதுங்கிக் கொள்வது நல்லது.
முன்பு சமரசப் பேச்சுவார்த்தைக்குக் கூப்பிட்டார்கள். நான் போய் பேசினேன். இப்போது யாரும்கூப்பிடவில்லை, அதனால் போகவில்லை. கூப்பிட்டால் போவேன்.
காஷ்மீரில் நடைபெறவுள்ள சிந்து மேளா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளேன் என்றார் அவர்.