தா.கி. கொலை: திருப்பத்தூர் சிவராமன் ஜாமீனில் விடுதலை
திருப்பத்தூர்:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சிவராமன் ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.
தா.கிருட்டிணன் படுகொலையைத் தொடர்ந்து மு.க.அழகிரியும் அவரது தீவிர ஆதரவாளரானசிவராமனும் கைது செய்யப்பட்டனர்.
சிவராமன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சமயத்தில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் சிவராமன் மனு செய்தார்.அந்த மனுவை விசாரித்த நீதிபதி, சிவராமனை ஜாமீனில் விடுதலை செய்து இன்று உத்தரவிட்டார்.
ஆனால், அழகிரிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிவகங்கை மாவட்டச்செயலாளர் பதவிக்கு தா.கிருட்டிணனுக்குப் பதிலாக சிவராமனை நிறுத்த கட்சி மேலிடத்திடம்அழகிரி சண்டையிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.