துபாய்: 2 தாவூத் கூட்டாளிகள் இந்தியாவிடம் ஒப்படைப்பு
மும்பை:
மும்பை தாதவான தாவூத் இப்ராஹிமின் 2 கூட்டாளிகளை துபாய் அரசு கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.
மும்பையில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரியாஸ் சித்திக் மற்றும் ராஜ்குமார் சர்மாஆகியோர் தாவூத் இப்ராகிம் துணையோடு துபாய்க்குத் தப்பினர். அங்கிருந்த வண்ணம் மும்பையில் பல்வேறு குற்றங்களைத் திட்டமிட்டுநடத்தி வந்தனர்.
இவர்களைப் பிடிக்க மும்பை உயர் நீதிமன்றம் சர்வதேச ரெட் கார்னர் நோடீஸைப் பிறப்பித்தது. இதையடுத்து இவர்களைக் கைது செய்ததுபாய் போலீசார் உடனே இந்தியாவுக்குத் தகவல் தந்தனர்.
இதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் குழு துபாய் சென்று இந்த இருவரையும் கைது செய்து நேற்றிரவு மும்பைக்கு விமானத்தில்கொண்டு வந்தனர். மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர்களை மும்பை கிரைம் பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர்.
இவர்களையும் சேர்த்து தாவூதின் கூட்டாளிகள் 8 பேரை துபாய் அரசு இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. முன்னதாக மஞ்சு முஸ்தபா,இஜாஸ் பதான் , இம்ரான் ரஹ்மான் கான் , இக்பால் கஸ்கர் , முகம்மது அல்தாப் மற்றும் அனில் பரப் ஆகிய 6 பேரை துபாய்அரசு இந்தியாவிடம் பிடித்துக் கொடுத்தது.
பதானும் , முஸ்தபாவும் 1993ல் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள். அல்தாப் மீது பொடாவழக்கு உள்ளது.
கஸ்கர் திருட்டு மற்றும் கொள்ளை வழக்கிலும், பரப் தன் மனைவியின் கொலை வழக்கிலும் பாலுவுட் நட்சத்திரங்களை மிரட்டிபணம் பறித்த வழக்கிலும் தேடப்பட்டு வந்தார்.