கோவில் விழாவில் பட்டாசு விபத்து: 6 பேர் கவலைக்கிடம்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் ஓரத்தநாடு அருகே பட்டாசு வெடித்ததில் 12 பேர் காயமடைந்தனர். இதில்படுகாயமடைந்த 6 பேரின் நிலை மோசமாக உள்ளது.

ஓரத்தநாடு அருகே கிழக்கு சோழபுரம் பகுதியில், மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.இதையொட்டி வான வேடிக்கைகள் நடந்தன.

அப்போது சிலர் கூட்டத்துக்குள் பட்டாசுகளை வெடித்தனர். பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியஇந்தப் பட்டாசுகளால் 12 பேருக்கு தீக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் அங்குமிங்கும்கலைந்து ஓடியதில் பலரும் கீழே விழுந்தனர்.

கீழே விழுந்தவர்கள் மீது பலரும் ஏறி ஓடினர். இதிலும் பலர் காயமடைந்தனர்.

பட்டாசு வெடித்து உடலில் தீக் காயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத்தெரிகிறது.

சமீபத்தில்தான் கரூரில் நடந்த மாரியம்மன் திருவிழாவின்போது, ராட்சத ராட்டினம் கவிழ்ந்து 11பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+