பெண்ணிடம் சங்கிலி பறித்த முன்னாள் போலீஸ்காரர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் பெண்ணிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடிய முன்னாள் மத்திய போலீஸ் படையைச் சேர்ந்தவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்தனர்.
வண்ணாரப்பேட்டை பகுதியில் ஒரு பெண் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஒருவர் அந்தப் பெண் கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டுஓடினார்.
பெண்ணின் அலறல் சப்தம் கேட்ட பொதுமக்கள், சங்கிலித் திருடனை விரட்டிப் பிடித்து அடித்து,உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அந்த நபரின் பெயர் சக்திவேல் என்றும் முன்னாள் மத்திய காவல் படையைச்சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications