ரயிலில் சென்ற ஜனாதிபதி கலாம்
ஹர்நாட் (பீகார்):
குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நேற்று ரயில் பயணம் மேற்கொண்டார். கடந்த 25ஆண்டுகளில் ரயிலில் சென்ற முதல் இந்திய ஜனாதிபதி இவர் தான்.
ஜனாதிபதி மாளிகைக்குச் சொந்தமான இந்த ரயில் சுதந்திரத்துக்குப் பின் பயணம் மேற்கொள்வதுஇது 5வது முறையாகும்.
முதன் முதலில் ராஜேந்திர பிரசாத் தான் இந்த ரயிலைப் பயன்படுத்தினார். பின்னர் நீலம் சஞ்ஜீவரெட்டி 1977 ஆம் ஆண்டு டெல்லியிலிருந்து மும்பைக்கு இந்த ரயிலில் சென்றார்.
குடியரசுத் தலைவருக்காக உருவாக்கப்பட்ட இந்த ரயிலில் அலுவல அறை, சமையல் அறை,உறங்கும் அறை, வரவேற்பறைகள் உண்டு. குடியரசு தலைவரின் அலுவலக அதிகாரிகளுக்கும் தனிஅறைகள் உண்டு.
கலாம் ஜனாதிபதி ஆனவுடன் இந்த ரயிலை புதுப்பிக்க வைத்தார். அதில் நூலகம், தொலைக்காட்சி,கம்ப்யூட்டர்கள், சாட்டிலைட் தொலைபேசி வசதிகளைப் பொறுத்த வைத்தார்.
பிகார் மாநிலம் ஹர்நாட்டில் இருந்து பாட்னாவுக்கு அவர் இந்த ரயிலில் சென்றார்.