திமுக மாஜி அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு, பொதுப் பணித்துறையினர் சோதனை
திருச்சி:
தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் புலவர் செங்குட்டுவன் ஆகியோரது வீடுகளில்மீண்டும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தினர். பொதுப் பணித்துறையின்பொறியாளர்களுடன் வந்த போலீசார் இவர்களுக்குச் சொந்தமான கட்டடங்களை மதிப்பீடுசெய்தனர்.
கடந்த தி.மு.க. ஆட்சியின் போது உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தார் கே.என்.நேரு. கால்நடைத்துறை அமைச்சராக இருந்தார் புலவர் செங்குட்டுவன்.
அதிகாரத்தில் இருந்தபோது இருவரும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் பினாமிகள் பெயரில்சொத்துகள் குவித்தாகக் கூறி லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணையை ஆரம்பித்தனர்.
திருச்சி தில்லைநகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள நேருவின் வீடு மற்றும் உறவினர்களின்வீடுகளில் லஞ்ச ஒழிப்பு பேலீசார் ரெய்டு நடத்தினர். மேலும் அவருக்குச் சொந்தமான மஞ்சள்மண்டி, தொழிற்சாலையிலும் அடிக்கடி ரெய்ட் நடத்தப்பட்டது.
இதே போல மருங்காபுரி தொகுதிக்குட்பட்ட வேலக்குறிச்சி கிராமத்தில் உள்ள முன்னாள் அமைச்சர்புலவர் செங்குட்டுவனுனின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புபோலீஸார் சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.
இந் நிலையில் இப்போது கே.என்.நேருவிற்கு சொந்தமாக தில்லைநகர் 10வது கிராஸில் உள்ளவீட்டிற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் வந்த புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.கோவிந்தராஜன் மற்றும் போலீசார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அந்த வீட்டை மதிப்பீடுசெய்தனர்.
மேலும் நேருவின் சொந்த ஊரான லால்குடி தொகுதிக்குட்பட்ட கானகிளியநல்லூர் மற்றும்பெருவளநல்லூர் ஆகிய பகுதியில் உள்ள வீட்டிலும் சொத்து மதிப்பிடும் பணியிலும் ஈடுபட்டனர்.
இதேபோன்று வேலக்குறிச்சி கிராமத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவனின்வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சொத்து மதிப்பிடும் பணியை மேற்கொண்டனர்.
இரு வாரங்களுக்கு முன் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்திற்கு சொந்தமாக ராம்ஜிநகர் பகுதியில்உள்ள கிரானைட் நிறுவனத்தில் மதிப்பையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கணக்கிட்டதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications