திமுகவும் வேண்டாம்.. அதிமுகவும் வேண்டாம்: காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் காங்கிரஸ் கூட்டணி வைத்துக்கொள்ளாது என அக் கட்சியின் மாநிலத் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறினார்.

திருச்சியில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். அடுத்தநாடாளுமன்றத் தேர்தலில் சோனி காந்தி தலைமையில் காங்கிரஸ் பெறும் பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும்.

சோனியா காந்தியைத் தான் பிரதமராக அறிவித்து காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்ளும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுகவின் ஆட்சிகளால் மக்கள் வெறுத்துப் போய்விட்டார்கள். இந்தக்கட்சிகளுக்கு மாற்றாக ஒரு அணியை காங்கிரஸ் உருவாக்கும். இக் கட்சிகளுடன் இனி வரும் தேர்தலில் கூட்டணிவைக்க மாட்டோம்.

கோஷ்டிப் பூசல் என்பது எல்லா கட்சிகளிலும் உள்ளது தான். அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமேஉரிமையானதல்ல.

தமிழகத்தின் வறட்சி நிலவரத்தை மத்திய அரசிடம் உரிய முறையில் எடுத்துச் சொல்லி நிவாரணம் பெற அரசுதவறிவிட்டது. ஜெயலலிதாவின் செயலற்றதன்மையால் பாதிக்கப்பட்டது ஏழை விவசாயிகள் தான்.

கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரைப் பெற காங்கிரஸ் கட்சியும் தன்னால் முடிந்த முயற்சிகளைச் செய்யும். அம்மாநில முதல்வரிடம் இது குறித்துப் பேசுவோம்.

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாவிட்டால் மீண்டும் தஞ்சாவூர், திருச்சி, கடலூர், நாகைமாவட்ட விவசாயிகள் வாடுவார்கள். இதன் மூலம் இந்த ஆண்டும் பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டுகாவிரி டெல்டா பகுதியே கருகிப் போய் விடும். தமிழகத்தின் எதிர்காலமே இருண்டு போய் விடும்என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+