பணத்தைக் கட்டினார் அதிமுக எம்.எல்.ஏ: திவால் உத்தரவு நிறுத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திவால் ஆனதாக அறிவிக்கப்பட்ட மதுராந்தகம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாசுதேவன், ரூ.90,000 பணத்தைக் கட்டியதால் அவர் திவால் ஆனதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னைஉயர்நீதின்ற நீதிபதி ராமமூர்த்தி நிறுத்தி வைத்தார்.

வெங்கட்ரமணி என்பவரிடம் எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்கிய வாசுதேவன் அதற்கானதொகையைத் தராததால் வெங்கட்ரமணி உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில்வெங்கட்ரமணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

இருப்பினும் வாசுதேவன் பணத்தைத் திருப்பித் தராமல்இருந்தார். இதையடுத்து அவரை திவால்ஆனவராக அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் வெங்க்டரமணி.இதையடுத்து வாசுதேவன் திவால் ஆகி விட்டதாகவும், அவரது சொத்துக்களை நீதிமன்றத்தில்ஒப்படைக்கும்படியும், உயர்நீதிமன்ற நீதிபதி ராமமூர்த்தி உத்தரவிட்டார்.

இந் நிலையில், நீதிபதி ராமமூர்த்தியின் வீட்டுக்குச்சென்ற வாசுதேவன், அங்கு ஒரு மனுவைத் தாக்கல்செய்தார். அதில், ரூ. 90,000 பணத்தைக் கட்டுவதாகவும், திவால் உத்தரவை நிறுத்தி வைக்கும்படியும்கோரினார். தொகையையும் கட்டினார்.

இதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ. வாசுதேவன் திவால் ஆனவராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்திவைத்து நீதிபதி ராமமூர்த்தி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+