மனைவியின் தலையை வெட்டி எடுத்து கொண்டு நடந்த முதியவர்
ஓசூர்:
தர்மபுரி மாவட்டம் ஓசூர் அருகே மனைவியை வெட்டிக் கொன்று தலையை கையில் பிடித்துக்கொண்டு நடந்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
ஓசூர் அருகே உள்ளது எச்சம்பாடி அகர்ஹாரம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சிகாமணி. இவருக்குவயது 61. இவரது மனைவி காளியம்மாள். இவருக்கு வயது 56. இருவரும் 10 ஆண்டுகளாகபிரிந்து வாழ்ந்து வந்தனர்.
காளியம்மாள் தனது மகனுடன், அதே கிராமத்தில் இன்னொரு வீட்டில் வசித்து வந்தார்.
இந் நிலையில் நேற்று காளியம்மாளுக்கும், சிகாமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.ஆத்திரமடைந்த சிகாமணி, மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
பின்னர் அவரது தலையை அறுத்து தனியே வெட்டினார். பின்னர் தலையை கையில் எடுத்துக்கொண்டு நடந்தார்.
இதைப் பார்த்த சிலர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து தலையுடன்சென்று கொண்டிருந்த சிகாமணியை கைது செய்தனர்.
மனைவியின் நடத்தை குறித்து சந்தேகப்பட்டதால் கொலை செய்ததாக சிகாமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications