தா.கி கொலை: கருணாநிதியை கைது செய்ய சு.சுவாமி கோரிக்கை
மதுரை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கு தொடர்பாக தி.மு.க தலைவர் கருணநிதியிடமும் விசாரணை நடத்தவேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
அகில இந்திய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:
தி.மு.க. முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யபட்டுள்ளமு.க.அழகிரியை காப்பாற்றுவதற்காக தி.மு.க. தலைவர் கருணநிதி போலீசாரின் புலன்விசாரணையை தடுக்க வழிவகைகளை தேடுகிறார். பிரச்சினையைத் திசை திருப்புவதற்காக பிரதமருக்குகடிதம் எழுதியுள்ளார்.
தா.கிருட்டிணனுடன் இணைந்து செயல்பட விரும்பவில்லை, அவரை தனக்குப் பிடிக்கவில்லைஎன்று மு.க.அழகிரி தனது தந்தைக்கு கடிதம் மூலம் தெரிவித்து உள்ளார். கொலை நடந்ததில் இருந்துதன்னை கைது செய்தது வரை கருணாநிதியுடன் 7 முறை மு.க.அழகிரி செல்போனில் பேசியபேச்சுகளை போலீசார் ரெக்கார்ட் செய்துள்ளனர்.
தா.கி. படுகொலையில், அழகிக்கு மட்டுமல்லாது, கருணாநிதிக்கும் தொடர்பு இருக்கலாம். எனவே அவரையும்கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். அத்தோடு, வருமானத்திற்கு அதிகமாக அழகிரி சேர்த்துள்ளசொத்துக்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்றார் அவர்.
உத்திரபிரேசத்தில் மாயாவதி தலைமையிலான தாழ்த்தப்பட்ட அரசு இருப்பது பாரதீய ஜனதாவுக்குபிடிக்கவில்லை. இதனால் தான் அவருக்கு ஆதரவு தந்த அஜீத்சிங்கை , ஆர்.எஸ்,எஸ். தூண்டுதலின்பேரில் பாரதீய ஜனதா மந்திரிசபையில் இருந்து வெளிடேற்றிவிட்டது. மாயாவதி அரசை வீழ்த்தஅஜீத்சிங்கை பயன்படுத்தி வருகிறது பா.ஜ.க.
தாங்களே கவிழ்த்தால் எதிர்காலத்தில் தலித் ஓட்டுக்கள் கிடைக்காமல் போய்விடும் என்பதால் அஜீத்சிங் மூலம் இந்த கவிழ்ப்பில் ஈடுபட்டுள்ளது பா.ஜ.க.
இலங்கையில் விடுதலைப் புலிகள் இடைக்கால அரசு அமைக்க வற்புறுத்துவதை சந்திரிகா ஏற்கமறுத்து விட்டார். இதனால் விடுதலைப் புலிகளுக்கும் , இலங்கை அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை முறித்துவிட்டது என்று தான் அர்த்தம் என்றார் சுப்பிரமணிய சுவாமி.












Click it and Unblock the Notifications