For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை கமிஷ்னர் கந்தசாமி அதிரடி டிரான்ஸ்பர்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை போலீஸ் கமிஷ்னராக இருந்த கந்தசாமி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட டி.ஐ.ஜியாக இன்று காலை அவர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாகவிழுப்புரம் டி.ஐ.ஜி. விஜய்குமார் மதுரை கமிஷ்னராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், விஜய்குமார் வரும் வரைபதவியில் நீடிக்க கந்தசாமிக்கு அவகாசம் தரப்படவில்லை.

உடனே, தனது பொறுப்புக்களை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜிய ரமேஷ் குடவாலாவிடம் ஒப்படைத்துவிட்டு விழுப்புரம்செல்லுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து தனது பொறுப்புக்களை அவர் ரமேஷ் குடவாலாவிடம் ஒப்படைத்துவிட்டு விழுப்புரம் கிளம்பினார்.விஜய்குமார் நாளை தனது மதுரை கமிஷ்னர் பொறுப்பை ஏற்பார் என்று தெரிகிறது.

தா.கிருட்டிணன் கொலையை அடுத்து திமுகவினர் மீது முதல்வர் ஜெயலலிதா விரும்பிய அளவுக்கு தீவிரமானநடவடிக்கைகளை இவர் எடுக்கவில்லை என்பதாலேயே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தா.கி கொலைநடந்தவுடன் அழகிரியைக் கைது செய்யவும் கந்தசாமி நடவடிக்கை எடுக்கவில்லை.

அரசியல் சண்டையில் சிக்க விரும்பாத அவர் ஆதாரங்கள் இல்லாமல் அழகிரியை கைது செய்ய முடியாது எனமறுத்ததாகத் தெரிகிறது.

மேலும் தா.கிருட்டிணன் கொலை நடந்தவுடன் இது தனிப்பட்ட விரோதம் காரணமான கொலையாகவும்இருக்கலாம் என்று கமிஷ்னர் கந்தசாமி பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டியளித்தார். இதற்கு சென்னையில்இருந்து அவருக்கு டோஸ் கிடைத்தது.

இதையடுத்து இந்தக் கொலையை திமுகவினர் செய்தனர் என்று ஜெயா டிவிக்கு பேட்டியளிக்க நிர்பந்திக்கப்பட்டார்கந்தசாமி. இதைத் தொடர்ந்து அவ்வாறு பேட்டியும் தந்தார். இப்போது அதிரடியாக தூக்கப்பட்டுள்ளார்.

மதுரை போலீசில் அழகிரிக்கு பல உளவாளிகள் இருப்பதாகவும் அவர்களைக் கண்டுபிடித்து களையெடுக்கவும்கந்தசாமி தவறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மதுரை காவல்துறையின் பல ரகசிய திட்டங்கள்,நடவடிக்கைகளைக் கூட அழகிரி முன் கூட்டியே தெரிந்து வைத்திருந்தாகவும் அதிமுகவினர் தரப்பில்கூறப்படுகிறது.

திருச்சி கமிஷ்னரும் மாற்றம்:

அதே போல திருச்சி கமிஷ்னர் அலெக்சாண்டர் மோகன் தண்ணி இல்லா காட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர்ராமநாதபுரம் டி.ஐ.ஜியாக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ராமநாதபுரம் டிஐஜி சுனில்குமார் சிங் திருச்சிகமிஷ்னராக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் சுனில்குமாருக்கு மறுவாழ்வு தரப்பட்டுள்ளது.

இது தவிர 33 டி.எஸ்.பிக்களுக்கு அடிசனல் எஸ்.பியாக பதவி உயர்வும் தரப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X