சொத்துக் குவிப்பு: காங்கேயம் வி.ஏ.ஓ வீட்டில் ரெய்டு

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேகரித்தது தொடர்பாக காங்கேயம் அருகே உள்ளபரஞ்சேர்வழி வி.ஏ.ஓ. (கிராம நிர்வாக அதிகாரி) நாகராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடிசோதனை நடத்தினர். இதில் அவர் குவித்துள்ள சொத்துக்கள் தொடர்பான பல ஆவணங்கள் சிக்கின.

பத்து ஆண்டுகளுக்கு மேலாக நாகராஜ் இப் பதவியில் இருந்து வருகிறார். இவர் வருமானத்தை மீறிசொத்து சேகரித்திருப்பதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து அவரது நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன.

அவர் வீட்டில் சோதனை நடத்துவதற்கு முறைப்படி ஈரோடு மாவட்ட முதன்மை குற்றவியல்நீதிமன்றத்தில் போலீஸார் அனுமதி பெற்றனர். ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ராஜாதலைமையில் தனிப்படையினர் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். ரூ.8 லட்சம் மதிப்புசொத்துகளுக்கான முக்கிய ஆவணங்கள் கிடைத்திப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

இவரது மாத வருமானம் ரூ. 7,000க்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு பணியில் இருப்பவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேகரிப்பு தொடர்பாக புகார்கள்வந்தாலும் பெரிய அளவில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்போது தான் அரசுஊழியர்கள் பக்கமும் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+