For Daily Alerts
Just In
ரேஷன் அரிசிக்கான கூப்பன் வினியோகம் தொடங்கியது
சென்னை:
ரேஷன் கார்டுகளுக்கான அரிசிக் கூப்பன் வினியோகம் தமிழகம் முழுவதிலும் இன்று தொடங்கியது.
சென்னையில் மாநில உணவுத்துறை அமைச்சர் மோகன் இதைத் தொடங்கி வைத்தார். சென்னையில் மட்டும் 625மையங்களில் 2,491 ஊழியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்அரிசிக் கூப்பன்கள் வழங்கப்படும்.
தமிழகம் முழுவதிலும் 3,601 மையங்களில் 45,666 ஊழியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அரிசிக் கூப்பன் வழங்குவதால் போலி ரேஷன் கார்டுகள் தடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மோகன் தெரிவித்தார்.
Comments
Story first published: Monday, June 2, 2003, 5:30 [IST]