For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எய்ட்ஸ் பெயரில் ஒரு மோசடி: வாலிபர்கள், பெண்களிடம் ரூ. 2.5 லட்சம் சுருட்டல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

எய்ட்ஸ் பிரசாரத் திட்டம் என்ற பெயரில் ஏராளமானவர்களிடம் ரூ. 2.5 லட்சத்திற்கும் மேலாகமோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அருகே உள்ள திருவொற்றியூரைச் சேர்ந்தவர் ஜோதிலிங்கம். இவர் தன்னம்பிக்கைஅறக்கட்டளை என்ற அமைப்பை அப்பகுதியில் நடத்தி வந்தார்.

அப்பகுதி இளைஞர்கள், பெண்களை அணுகிய இவர் தமிழக அரசின் எய்ட்ஸ் பிரசாரத் திட்டத்தைதான் மேற்கொண்டு நடத்தவிருப்பதாகவும், இதில் சேருவோருக்கு அரசு வேலை வாய்ப்பில்முன்னுரிமை தரப்படும் என்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் வேலை கிடைக்கும் என்றும்கூறியுள்ளார்.

இதை நம்பிய பலரும் அவரது அறக்கட்டளையில் சேரவும் எய்ட்ஸ் ஒழிப்புத் திட்டத்தில் சேரலும்முன் வந்தனர். அவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்துள்ளார் ஜோதிலிங்கம்.

அரசு வேலைதான் கிடைக்கப்போகிறதே என்ற எண்ணத்தில் இளைஞர்களும், பெண்களும்பணத்தைக் கொடுத்துள்ளனர். இந் நிலையில் 5 மாதங்களாகியும், கூறியபடி பிரசாரத் திட்டம் எதுவும்ஆரம்பிக்கப்படாத காரணத்தால், ஜோதிலிங்கத்தை அணுகினர் பணம் கொடுத்தவர்கள்.

அப்போது அவர் சொன்ன பதில் அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சிலர்போலீஸில் புகார் கொடுத்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது தான் ஜோதிலிங்கம் பெரிய பிராடு என்பது தெரியவந்தது. முதல்வர் ஜெயலலிதாவின்பெயரைக் கூறியும், தமிழக அரசின் திட்டம் என்று பொய் கூறியும், பண வசூலில் அவர் ஈடுபட்டஅவரை போலீஸார் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X