For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்கள் விரோத அரசாக மாறி வருகிறது அதிமுக ஆட்சி: நல்லகண்ணு

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் வீசி விட்டு, மக்கள் விரோத அரசாகஅதிமுக ஆட்சி மாறி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணுகூறியுள்ளார்.

கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தலின்போது மக்களுக்குக் கொடுத்தவாக்குறுதிகளை முதல்வர் ஜெயலலிதா காற்றில் பறக்க விட்டு விட்டார்.

மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச பஸ் பாஸ் சலுகையை ரத்து செய்துள்ளனர். அரசுக்குஇதன் மூலம் ரூ. 100 கோடி மிச்சமாகும் என்கிறார்கள். ஆனால் சலுகை ரத்து காரணமாகஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். பலர் படிப்பையே விட்டு விடும்சூழ்நிலையும் உருவாகும்.

அடிக்கடி அமைச்சர்களை மாற்றுவது சரியான செயலல்ல. ஒரு அமைச்சர் தனது துறை குறித்துத்தெரிந்து கொள்வதற்கு 2 மாதம் பிடிக்கும். அதற்குக் கூட அவகாசம் தராமல் மாற்றிவிடுகிறார்ஜெயலலிதா.

அடிக்கடி அமைச்சரை மாற்றினால், நிர்வாகம் அதிகாரிகளின் கைக்குப் போய் விடும் அபாயம்உள்ளது.

மாநிலத்தில் நிலவும் வறட்சி, குடிநீர்ப் பிரச்சினை ஆகியவை குறித்தும் அதிமுக அரசுகவலைப்பட்டால் நல்லது என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X