Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராணி மேரி ஆசிரியைகள் இடமாற்றத்தை எதிர்த்து வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசின் இடமாற்ற உத்தரவை எதிர்த்து ராணி மேரிக் கல்லூரி பேராசிரியைகள் 3 பேர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

ராணி மேரிக் கல்லூரியை இடிக்க முயன்ற அதிமுக அரசை எதிர்த்து அக்கல்லூரி மாணவிகள்,மற்றும் ஆசிரியைகள் காலவரையற்ற போராட்டத்தை நடத்தினர். கோர்ட்டிலும் வழக்குதொடரப்பட்டது.

இந் நிலையில் அந்தக் கல்லூரியைச் சேர்ந்த 7 பேராசிரியயைகளை அரசு அதிரடியாக இடமாற்றம்செய்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த இட மாற்றத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்சபனா பேகம், பத்மாவதி, ராஜேஸ்வரி ஆகிய 3 ராணி மேரிக் கல்லூரி பேராசிரியைகளும்வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

அதில், தமிழக அரசு எங்களைப் பழிவாங்கும் விதமாகவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.பல்கலைக்கழக ஊழியர்களான எங்களை தமிழக அரசு இஷ்டம்போல் இடமாற்றம் செய்யமுடியாது. எனவே இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மனுவை விசாரணைக்கு ஏற்ற கோடைகால சிறப்பு நீதிபதி பாலசுப்ரமணியம், இந்த வழக்குதொடர்பாக 2 வார காலத்திற்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி கல்லூரி முதல்வர், கல்லூரிக்கல்வி இயக்குனர், உயர் கல்வி இயக்குனர், சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோருக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+