கொலை, கொள்ளை, வழிப்பறி: போலீஸ்காரர்களின் மகன்கள் கைது
![]() |
| கைதான ரெளடிகள் மகாராஜன், சரவணகுமார், சங்கர் |
சென்னை:
கோவில்பட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு 3 ரெளடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த மூவரும் போலீஸ்காரர்களின் மகன்களாவர்.
கோவில்பட்டியைச் சுற்றி நடந்து வந்த தொடர் கொள்ளைகளால் போலீசார் திகைத்துப்போயிருந்தனர். இரவில் வழிப்பறிகளும் அதிகரித்தவண்ணம் இருந்தன. அந்தப் பகுதி ரெளடிகளைஎல்லாம் பிடித்து உள்ளே போட்ட பின்னரும் கொலையும் கொள்ளை, வழிப்பறிகளும்குறையவில்லை.
இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சுமித் சரண் கண்காணிப்பில்கோவில்பட்டி இன்ஸ்பெக்டர் அருளப்பன், போலீஸ்காரர்களான ராஜ், செல்வம், வேலுச்சாமி,ராமசந்திரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது,.
இந்தப் படையினர் அதிகாலை கோவில்பட்டி- சாலைப்புதூர் ரோட்டில் ஜீப்பில் ரோந்து வந்துகொண்டிருந்தனர்.
அப்போது அங்கு நின்றிருந்த மூவர் போலீஸ் ஜீப்பைக் கண்டவுடன் ஓட ஆரம்பித்தனர்.இதையடுத்து போலீசாரும் விரட்டிச் சென்றனர். நிற்காவிட்டால் சுட்டுக் கொல்வேன் எனஇன்ஸ்பெக்டர் அருளப்பன் எச்சரித்தையடுத்து மூவரும் நின்றனர்.
அவர்களை அப்படியே அள்ளிப் போட்டுக் கொண்டு கோவில்பட்டி காவல் நிலையம் வந்திறங்கியபோலீஸ் டீம் கடும் விசாரணையை ஆரம்பித்தது.
இவர்களது பெயர் மகாராஜன் (வயது 21), சரவணகுமார் (வயது 23), சங்கர் (வயது20).
போலீசார் இவர்களை அடித்து உண்மைகளை வாங்கியபோது அவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சிகாத்திருந்தது. இந்த மூன்று கொள்ளையர்களில் இருவர் போலீஸ்காரர்களின் மகன்கள் என்றுதெரியவந்தது.
இதில் மகாராஜனின் தந்தை கொம்பையா மாஞ்சோலை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகஉள்ளார்.
சங்கரின் தந்தை சங்கையாபாண்டியன் கோவில்பட்டி போக்குவரத்துறையிலேயே தலைமைக்காவலராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியபோதெல்லாம் அதைதங்களது போலீஸ் தொடர்புகள் மூலம் தெரிந்து கொண்டு சென்னைக்குத் தப்பிச் சென்றுவிடுவார்களாம்.
பின்னர் ஊருக்கு வந்து கொலை, கொள்ளை, வழிப்பறிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர்.
இவர்களிடமிருந்து நாட்டுவெடி குண்டுகள், அரிவாள், கத்தி, வாள் ஆகியவற்றையும் போலீஸார்பறிமுதல் செய்துள்ளனர்.
இவர்களின் முக்கிய கூட்டாளியான ராஜபாண்டியன், கொம்பையா ஆகியோரை போலீஸார் தேடிவருகின்றர்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!













Click it and Unblock the Notifications