விபச்சாரத்துக்கு உதவிய இன்ஸ்பெக்டரின் பதக்கம் பறிப்பு: அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விபச்சார விடுதி நடத்த அனுமதித்ததுடன், ரூ 20,000 லஞ்சம் வாங்கிக் கொண்டு 4 விபச்சாரப் பெண்கள் மீதுவழக்குப் போடாமல் விடுதலை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வழங்கப்பட்ட முதல்வரின் தங்கப் பதக்கம்பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன். இவருக்கு கடந்த 2001ம்ஆண்டு நடந்த அண்ணா பிறந்த நாள் விழாவின்போது, கடமை தவறாமல் பணியாற்றியதற்கான முதலமைச்சரின்தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

இந் நிலையில், இவர் மீது விபச்சார கேஸ் புகார் வந்தது. புகார் குறித்து விசாரிக்குமாறு டிஜிபி கோவிந்த், சேலம் சரகடி.ஐ.ஜிக்கு உத்தரவிட்டார்.

விசாரணையில், அன்னதானப்பட்டியில், ஒரு வீட்டில் விபச்சாரம் நடந்து வருவதும், அந்த வீட்டை கருப்பசாமிஎன்பவர் வாடகைக்கு எடுத்து விபச்சாரத்திற்குப் பயன்படுத்தி வருவதும், கருப்பசாமிக்கு பல வகையிலும்இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உதவியாக இருந்து வருவதும் தெரியவந்தது.

புதிதாக அப் பகுதிக்கு விபச்சாரத்துக்கு வரும் பெண்களை முதலில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்கு விருந்தாகபடைத்துள்ளார் புரோக்கர் கருப்பசாமி.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த வீட்டில் விபச்சாரம் நடப்பது குறித்து சிலர் புகார் தரவே, 4 விபச்சாரப்பெண்களை ராஜேந்திரன் கைது செய்தார். ஆனால், கருப்பசாமியிடமிருந்து ரூ. 20,000 பணம் வாங்கிக் கொண்டுஅவர்கள் மீது வழக்கே போடாமல் விடுதலை செய்துள்ளார் என்பதும் விசாரணையில் உறுதியானது.

இதையடுத்து ராஜேந்திரனின் தங்கப் பதக்கத்தைத் திரும்பப் பெறலாம் என்று அரசுக்கு டிஜிபி கோவிந்த் பரிந்துரைசெய்தார். இதைத் தொடர்ந்து அவரது தங்கப் பதக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒரு ஆண்டு வரை அவரது ஊதிய உயர்வும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+